
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் தரைகீழ் தடுப்பணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். விரைவில், திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் உற்பத்தியாகும் பாலாறு தமிழகத்தில் மட்டும் சுமார் 222 கி.மீ பயணித்து வயலூர் அருகே வங்கக் கடலில் கலக்கிறது. இதில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 127 கி.மீ தொலைவுக்கு பாய்ந்தோடும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி மழைக்காலத்தில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்