
கூவம் ஆற்றின் முகத்துவாரத்தை ரூ.70 கோடி செலவில் திறந்த நிலையில் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் நுழையும் கூவம் ஆறு, பல்வேறு பகுதிகளில் மாசுபடுத்தப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூவம் ஆற்றின் முகத்துவாரம் கடல் மணலால் மூடப்பட்டுக் கிடப்பதால், கடல் அலைகள் கூவம் ஆற்றில் நுழைந்து அதன் தாக்கம் குறைக்கப்படுவதும் தடைபடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்