
அசாமில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதிவாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் கதிர்வேல்(36). இவருக்கு சண்முகப்பிரியா(25) என்ற மனைவியும், ஹனிஷ்க்(7), பார்த்திவ்(3) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கதிர்வேல் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்