
சேலம் மாவட்டத்தில் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபுகூறியதாவது: மாநிலத்தில் முதல்நிலை கோயில்களாக விளங்கும் 539 கோயில்களில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டியதை ஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம் கோயில்களை நந்தவனம், திருத்தேர், தெப்பக்குளம், தலவிருட்சம் வைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்