
மதுரை மாநகராட்சி ஆணையர் தன்னை அவமதித்ததாகவும், இது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்போவதாகவும் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15,000 ஊக்கத் தொகையை வழங்க வேண்டும். பணியிலிருந்தபோது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்