
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைத்து இருப்பது, மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என மத்திய அரசு, உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, அதற்கான மாற்றுவழி குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்