
முதல்வர் நிவாரண நிதிக்கு ஜூலை 8-ம் தேதி வரை ரூ.472.68 கோடி நிதி சேர்ந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரி வித்தார்.
தமிழகத்தில் கடந்த மே 7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றது. அப்போது கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி முதல்வர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, நேரிலும் பல்வேறு வழிகளிலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அதிகளவில் நிதி சேர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்