
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை அதிகரிக்கும் நோக்குடன், மாவட்ட ரோட்டரி சங்கங்கள் இணைந்து, 400 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவ வளாகக் கட்டிடம் கட்டும் பணி, கடந்த மே 18-ம் தேதி தொடங்கியது. திருப்பூர் டீம்ஏஜ்-இன் பிரிகாஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டுமானப் பணிகள் நடந்தன.
அமைச்சர் சு.முத்துசாமியின் முயற்சியின்பேரில், ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் மற்றும் பல சேவை சங்கங்கள், தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.14.5 கோடி மதிப்பீட்டில், 69 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டுமானப் பணி நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்