
கர்நாடகம் - தமிழகம் இடையே காவிரி பிரச்சினை இருந்து வரும் நிலையில், தமிழ் மொழியுடன் தொடர்புடைய 60 ஆயிரம் கல்வெட்டுகளை மைசூருவில் வைத்திருப்பது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப் படுகைகளில் அகழாய்வு நடத்தக் கோரியும், மதுரை சமணர் படுகைஉள்ளிட்ட பழங்கால அடையாளங்களை பாதுகாக்கக் கோரியும் முத்தாலங்குறிச்சியை சேர்ந்த எழுத்தாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்