
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் திருச்சி அம்மா மண்டபத்தில் காவிரித் தாய்க்கு நேற்று சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவரான நம்பெருமாள் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் நாள் அல்லது ஆடி 28-ம் நாளில் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் மாலையில் காவிரித் தாயாருக்கு மங்களப் பொருட்களை சீர்வரிசையாக அளிப்பார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்