
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக்கவசங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இவை சட்டப்படி காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அங்கீகாரம் பெற்றவையாகும்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் முத்திரையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வேறு ஒரு நிறுவனம் தரமற்ற முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்