
தமிழக கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மாயமாகவில்லை என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழக அரசு கடந்த 1985–87-ம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் கடந்த 2018–19, 2019–20-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளது. எனவே மாயமாகியுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்