
புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவற்றில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள 19-3-2021-ல் வெளியிடப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்