
சிம் கார்டு வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல பேசி, பெண் மருத்துவரின் செல்போனை ஹேக் செய்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தனர்.
சென்னை அண்ணா நகரைச்சேர்ந்தவர் சாந்தினி பிரபாகர். மருத்துவர். அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், வாடிக்கையாளர் குறித்த முழு விவரங்களைத் தருமாறும், தகவல்களை தரத் தவறினால், சிம் கார்டு செயலிழந்து விடும் எனவும் கூறப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்