
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கோயில் குளங்களின் அருகே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடி அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக இந்த நாளில், ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இதனால், கடற்கரைகள், கோயில் குளங்களின் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்