
உடுமலை வனப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், யானைகள் பாதுகாப்பில் வனத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சூழல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில் கரட்டுர் சடையன்பாறை வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின் சடலத்தில் இருந்த தந்தத்தை மர்மநபர்கள் வெட்டி, கடத்திச் சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையின்போது, யானையின் உடலில் இருந்து பால்ரஸ் குண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்