
சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த சென்னை கடற்கரை-வேலூர் கண்டோன்மென்ட் மின்சார ரயில் தற்போது விரைவு ரயிலாக இயக்கப்படுவதால், கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியுள்ளதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி ஃபாஸ்ட் லோக்கல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்