
தாம்பரம் ரயில் நிலையத்தில், சென்னை – திருச்சி சோழன் விரைவு ரயில் (எண் 06795) வருகை தொடர்பாக தவறான ஒலிபெருக்கி அறிவிப்பால், முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பயணிகள் மிகுந்தசிரமத்துக்கு உள்ளாகினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்துநேற்று காலை 8 மணியளவில் சென்னை-திருச்சிசோழன் விரைவு ரயில் (எண்.06795) புறப்பட்டது. இதற்காக தாம்பரம் ரயில் நிலைய 7-வது நடைமேடையில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது, நடைமேடையில் உள்ள தானியங்கி ஒலிபெருக்கியில் சென்னை-திருச்சி சோழன் விரைவு ரயிலின் டி-1 பெட்டி 16-வது பெட்டியாக வரும் என்று அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்