
மேற்கு வங்கத்தில் முறைகேடாக 2 ஆண்டுகள் பயணிகள் ரயிலை இயக்கிய 17 வயது இளைஞர் உட்பட இருவரை ஈரோடு ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. ஈரோடு ரயில்வே போலீஸார் அந்த ரயிலில் சோதனை நடத்தியபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் அமர்ந்திருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தங்களை ரயில் இன்ஜின் ஓட்டுநர் (லோகோ பைலட்) என்று கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்