
காந்தியின் கனவை நனவாக்கும் விதமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைவில் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும் எனபிரிவு உபச்சார விழாவில் மூத்த நீதிபதி என்.கிருபாகரன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு அடுத்தபடியாக 2-வது மூத்தநீதிபதியாக பணியாற்றிய என்.கிருபாகரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிதலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளும், ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிபதி என்.கிருபாகரனின் தாயார்ராஜம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்