
குப்பைத் தொட்டி அருகே மனித எலும்பு மற்றும் மண்டை ஓடு கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அவை மருத்துவ மாணவியின் ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
சென்னை சாஸ்திரி நகரில் குப்பைத் தொட்டி அருகில் பிளாஸ்டிக் கவரில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலின் எலும்புகள் கடந்த 23-ம் தேதி கிடந்தன. தூய்மைப் பணியாளர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அவற்றைக் கைப்பற்றி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்