
தமிழகத்தில் உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையிலேயே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, நரிக்குறவ மாணவி ஒருவருக்கு கையடக்க கணினி, கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கான சான்றிதழ், முன்களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்