
கும்மிடிப்பூண்டி தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கவும், சீரான ரயில் சேவை வழங்க கோரியும்பொன்னேரியில் ரயில்களை மறித்து பயணிகள் நேற்று பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இந்த தடத்தில் 4 மணி நேரம் ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 450 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் போதிய அளவில் மின்சார ரயில்களை இயக்குவதில்லை, காலதாமதமாக இயக்குவதாக பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்