
சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே நடுக்கடலில் நேற்று ஏற்பட்ட மோதலில், ஒரு ஃபைபர் படகு சேதமடைந்து, 3 மீனவர்கள் காயமடைந்தனர். கரையில் 4 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இருவேறு பிரிவாக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுருக்குமடி வலைக்கு ஆதரவான மீனவர்கள் நேற்று தங்களின் விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்