
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில், காலனிஆதிக்க அடக்குமுறையில் இருந்துநமது நாட்டை மீட்க உயிர்த்தியாகங்கள் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துவோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்