
கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம், ராமேசுவரம், சதுரகிரி உள்ளிட்ட இடங்கள் நேற்று வெறிச்சோடின.
மறைந்த தங்களது தாய், தந்தையர் மற்றும் மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளன்று பிதுர்கடன் செலுத்துவது இந்துக்கள் வழக்கம். இதில், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்