
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் இருந்து லெட்சுமியூர் வழியாக கடையத்துக்கு தடம் எண் 27-ஏ என்ற அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் குத்தப்பாஞ்சான் கிராமத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சேர்மக்கனி என்ற பெண் ஒருவர் ஏறினார். அப்போது, குழந்தையுடன் ஒரு பெண் ஓடிவந்தார். பேருந்தை நிறுத்தி அவரையும் ஏற்றிக்கொள்ளுமாறு ஓட்டுநரிடம் சேர்மக்கனி கூறியுள்ளார்.
அதற்கு பேருந்து ஓட்டுநரான பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதிமுத்து, `நான் பேருந்தை நிறுத்திட்டு, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு சேலை அணிவித்து அழைத்து வர முடியுமா?’ என்று கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்