
மன்னார்குடியில் தனியார் வங்கியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள், ஒருவருக்கு 9 ஆண்டுகள், மற்றொருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷத்தில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வந்தது (தற்சமயம் மன்னார்குடியில் செயல்பட்டு வருகிறது). கடந்த 7.5.2018 அன்று மதியம் இந்த வங்கிக்குள் புகுந்த 7 பேர் அடங்கிய கும்பல், வங்கி மேலாளரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, வங்கியில் இருந்த ரூ.5 லட்சத்து 58 ஆயிரத்து 550 ரொக்கம், 84 கிராம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்