
பெரியார் சிலை கல்வெட்டுகளில் உள்ள இறை மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்து தமிழர் பேரவை, பாரத் இந்து முன்னணி, ஆதி சிவ சோழர் புலிப்படை ஆகியவை இணைந்து பெரியார் சிலைகளில் உள்ள இறை மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்