
மத்திய அரசு வழங்கியதுபோல் 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்பு ரத்தில் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோபிநாதன், அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாவட்டதலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்