
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 15) காலை தேசியக் கொடியேற்றி வைத்து, உரையாற்றுகிறார்.
இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகசட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு முதல்முறையாக தேசியக் கொடியேற்றிவைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்