
கோயில் நிலங்களில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் செப்.1 முதல் ஆன்லைனில் வாடகைசெலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்துஇணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான மனைகள், கட்டிடங்களின் குத்தகைதாரர், வாடகைதாரர்களிடம் இருந்துஅந்தந்த கோயில் நிர்வாகங்களால் குத்தகை, வாடகையை ரொக்கமாகவும், காசோலை மூலமாகவும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.கோயில் அசையா சொத்துகள் தொடர்பான கேட்பு வசூல் நிலுவை விவரங்களை ஆன்லைன் வழியே பதிவேற்றம் செய்து குத்தகை, வாடகை தொகையை வசூலித்திட ஏதுவாக தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலமாக ஒரு மென்பொருள் உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்