
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை நீட்டிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பால், தூத்துக்குடியில் சுமார் 1,500 போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரவில்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மூன்று மாதம் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் மே 13-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்