
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, சாயர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகரித்து வருகிறது. நல்ல வருமானம் கிடைப்பதாலும், பராமரிப்பு செலவு குறைவு என்பதாலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனர்.
முருங்கை கொள்முதல் செய்வதற்காக சாத்தான்குளம், தட்டார்மடம், போலையர்புரம், இடைச்சிவிளை உள்ளிட்ட இடங்களில் தனியார் முருங்கை மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டிகள் முருங்கைக் காய்களை கொள்முதல் செய்து, அவற்றை பேக்கிங் செய்து லாரிகள் மூலம் மதுரை, சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், டெல்லிக்கு அனுப்புகின்றனர். இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்