
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பங்கீட்டில் திமுக, அதிமுக கூட்டணிகளில் இழுபறி நீடித்து வருகிறது. வார்டுகள் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக நிர்வாகிகள் நேற்று ஆலோசித் தனர். தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பாமகவும் சில மாவட்டங்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்