
புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் பாரதி பூங்கா அருகில் உள்ள சட்டப்பேரவை முன்பகுதி நுழைவு வாயில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் காரில் வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் இந்த நுழைவு வாயிலில் வர முடியாது.
சட்டப்பேரவை பின்புறவாயில் வழியாக அரசு அதிகாரிகள், சட்டமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் வந்து செல்ல வேண்டும். இந்த நடைமுறை சட்டப்பேரவை நடக்கும் நாட்களில் பின்பற்றப்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்