
காரைக்குடியில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அச்ச மடைந்துள்ளனர். கடந்த 2 மாதங் களில் 100 பவுன் நகைகள் திருடு போயுள்ளன.
காரைக்குடி கண்ணுப்பிள்ளை தெருவைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் (68), சந்திரா (58). இவர்கள் நேற்று அதிகாலை உறவினர் வீட்டு விசேஷத்துக்காக அப்பகுதியில் நடந்து சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர்களை தாக்கிவிட்டு சந்திரா அணிந்திருந்த தாலி செயின் உட்பட 14 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்