
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேற்று சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 3 மாதங்களாக பல முக்கிய இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று சென்னை திருவான்மியூர், தாம்பரம், பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்