
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காரைக்காலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 39 விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிளிஞ்சல்மேடு கடலில் கரைக்கப்பட்டன.
காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேரு நகர், தலத்தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சக்தி விநாயகர் குழு சார்பில் 39 விநாயகர் சிலைகள் கடந்த 10-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. ஏழை மாரியம்மன் கோயிலில் தலைமை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்