
சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை சார்பில், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சைக்கிள் பயணம் நேற்று முன்தினம் நள்ளிரவு மற்றும் நேற்று காலை நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி, ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் பொதுமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி பல்வேறு சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநகரில் ஒரு வார காலத்துக்கு சைக்கிள் பயணம், பூங்காக்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்