
தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், நேற்று சென்னை திரும்பினர். மக்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 700-க்கும் மேற்பட்ட சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியோடு (வெள்ளி), சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், சென்னையில் இருந்து சுமார் 1.50 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். 3 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில், நேற்று மதியம் முதல் மக்கள் மீண்டும் சென்னைக்கு வரத் தொடங்கினர். இதனால், நேற்று மாலை முதல் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்