
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டபடி 'சற்றே குறைப்போம்', 'உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம்', 'உபயோகித்த எண்ணெய்யின் மறுபயன்பாட்டுத் திட்டம்' ஆகிய 3 திட்டங்கள் தமிழகத்தில் முதன்முதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் இத்திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்