
கரோனா தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா, தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்குவதாக பவானி வட்டாட்சியர் அறிவித்ததால் மக்கள் உற்சாகமாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், பவானியில் 39 மையங்கள், அம்மாப்பேட்டையில் 63 மையங்களில் நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமுக்கு வரும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், தடுப்பூசி போட வருபவர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்