
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாநோயாளிகளுக்காக ஏற்கெனவே 2 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இம்மருத்துவமனையில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள ஏதுவாக மத்திய அரசு உதவியோடு, ரூ.2கோடி செலவில் புதிய ஆக்சிஜன்உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இம்மையத்தை நேற்று ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்