
மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சார்பில் வர்த்தக வார விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி சென்னை தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் உள்ள சிடிஎஸ் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உள்ளூர் தொழில்களை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சுயசார்பு பாரதம் என்ற சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்