
கூடலூரில் ஆற்றில் கரை ஒதுங்கியஉடலை மீட்கச் சென்றபோது, உயிரிழந்தது தனது தந்தை என்பதை அறிந்த தீயணைப்பு வீரர் அதிர்ச்சியில் உறைந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்பு பாலம் பகுதியில், ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், கூடலூர்தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் பாலமுருகன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் இரும்பு பாலம் பகுதிக்கு சென்று உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்