
கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கை மறு விசாரணை செய்ய அனுமதி கோரி கோத்தகிரி வட்டாட்சியரிடம் சோலூர்மட்டம் போலீஸார் மனு அளித்துள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளைவழக்கில் கூடுதல் விசாரணைக்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் அரசு தரப்பு சாட்சிகள், குற்றம்சாட்டப்பட்டோரிடம் உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்