
தமிழகத்தில் மண்பாண்டம் செய்பவர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், நில மேம்பாடு மற்றும் சாலைப் பணிக்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய, பாப்பிரெட்டிபட்டி தொகுதி அதிமுக உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, ‘‘மண்பாண்டம் செய்வதற்கும், செங்கல் சூளைக்கும், சாலைப் பணிகளுக்கும், கட்டிடப் பணிகளுக்கும் மண் எடுப்பது, விவசாயிகள் வண்டல் மண் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மண்பாண்டம் செய்வதற்கு 800 வண்டிஎடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்