
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையை சேர்ந்தவர் டி.கே.பரணி(52). கைவினை கலைஞரான இவர், தன் தாத்தா, தந்தை வழியில் அரிசி மற்றும் சந்தன மரத்தில் சிற்பங்கள் உருவாக்கும் பணியில், கடந்த 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
அரை அரிசி முதல், 4 அரிசி வரை பயன்படுத்தி, திருவள்ளுவர், தேச தந்தை மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் சிற்பங்களை உருவாக்கியுள்ள டி.கே.பரணி, மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்