
மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்று விடாமல், திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி வளர்த்து, பள்ளியோடு, சமுதாயத்தையும் மேம்படுத்தும் ஆசிரியர்கள் பலர் உண்டு. அந்த நல்லடையாள ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்.5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளன்று, ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நல்லாசிரியர்கள் அனைவருக்கும் அன்புவாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வதில், ‘இந்து தமிழ் திசை' பெருமிதம் கொள்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்